என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Byமாலை மலர்18 Dec 2019 6:16 AM GMT (Updated: 18 Dec 2019 6:16 AM GMT)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
புதுடெல்லி:
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 59 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம், சட்டவிரோதம் என அறிவிக்க கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன.
அப்போது, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேசமயம், இந்த சட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X