search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒடிசாவில் இளம்பெண் கற்பழிப்பு- கணவரின் நண்பர் வெறிச்செயல்

    ஒடிசா மாநிலத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக அவரது கணவரின் நண்பர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கலாகந்தி மாவட்டம் பவானி பட்னா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்.

    சம்பவத்தன்று அந்த பெண்ணை அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

    3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு இடத்தில் வைத்து கற்பழித்து உள்ளனர். இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு பெண்ணின் ஏ.டி.எம். கார்டையும் பறித்து சென்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண் 3 பேர் தன்னை கற்பழித்தது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பெண்ணிடம் வாக்கு மூலம் பெற்று அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பெண்ணிடம் இருந்து அபகரித்து சென்ற ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
    Next Story
    ×