என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்
Byமாலை மலர்7 Dec 2019 9:53 AM GMT (Updated: 7 Dec 2019 9:53 AM GMT)
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராஞ்சி:
இந்நிலையில், கிழக்கு சிங்பம் மாவட்டத்துக்குட்பட்ட 234-வது வாக்குச்சாவடியில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் சந்திரா கிரி என்பவர் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனிருந்த காவலர்கள் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
ஹரிஷ் சந்திரா கிரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். கடமையின்போது உயிரிழந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் சந்திரா கிரி(44) உத்தர பிரதேசம் மாநிலத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு சிங்பம் மாவட்டத்துக்குட்பட்ட 234-வது வாக்குச்சாவடியில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் சந்திரா கிரி என்பவர் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனிருந்த காவலர்கள் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
ஹரிஷ் சந்திரா கிரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். கடமையின்போது உயிரிழந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் சந்திரா கிரி(44) உத்தர பிரதேசம் மாநிலத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X