என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடியுடன் ஜப்பான் மந்திரிகள் சந்திப்பு
Byமாலை மலர்30 Nov 2019 9:44 AM GMT (Updated: 30 Nov 2019 9:44 AM GMT)
இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி:
இந்தியா-ஜப்பான் 13-வது ஆண்டு உச்சி மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெற்றது. இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அம்மாநாட்டில் பங்குபெற்ற பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
அவ்வகையில், இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் அடங்கிய குழுவினர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இந்தோ-பசிபிக் பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டன.
இதையடுத்து, ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி டரோ கோனோ பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டொஷிமிட்சு மொடெகி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X