என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு- ராணுவ வீரர் காயம்
Byமாலை மலர்22 Nov 2019 7:29 AM GMT (Updated: 22 Nov 2019 7:29 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் உள்ள டெர்ரம் என்ற வனப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் உள்ள டெர்ரம் என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இன்று அதிகாலை அங்கு மாவோயிஸ்டுகளை வேட்டையாட மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு இருந்தனர். மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
ஆனால் குறிப்பிட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் யாரும் இல்லை. என்றாலும் சில இடங்களில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.
ஒரு இடத்தில் தோண்டிய போது சக்தி வாய்ந்த கண்ணி வெடிகுண்டு வெடித்தது.
இதில் முன்னாகுமார் என்ற ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அந்த பகுதியில் மேலும் கண்ணி வெடிகள் இருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு கண்ணி வெடிகளை தேடும் பணிகள் நடந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் உள்ள டெர்ரம் என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இன்று அதிகாலை அங்கு மாவோயிஸ்டுகளை வேட்டையாட மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு இருந்தனர். மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
ஆனால் குறிப்பிட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் யாரும் இல்லை. என்றாலும் சில இடங்களில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.
ஒரு இடத்தில் தோண்டிய போது சக்தி வாய்ந்த கண்ணி வெடிகுண்டு வெடித்தது.
இதில் முன்னாகுமார் என்ற ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அந்த பகுதியில் மேலும் கண்ணி வெடிகள் இருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு கண்ணி வெடிகளை தேடும் பணிகள் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X