என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் - விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை
Byமாலை மலர்9 Nov 2019 6:51 PM GMT (Updated: 9 Nov 2019 6:51 PM GMT)
2024-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறியுள்ளார்.
இந்தூர்:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறுகையில், ‘ராமஜென்மபூமி நியாஸ் தயாரித்துள்ள வடிமைப்பின்படி பிரமாண்டமான கோவில் அயோத்தியில் கட்டப்படும். கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறக்கட்டளை மூலம் இந்த கோவில் கட்டப்படும். 2024-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் இருக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
நூற்றாண்டு பழமையான பிரச்சினையில் சமநிலையான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதாக கூறிய விஷ்ணு கோக்ஜே, எனவே இந்த தீர்ப்பால் எந்த பிரிவினருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறுகையில், ‘ராமஜென்மபூமி நியாஸ் தயாரித்துள்ள வடிமைப்பின்படி பிரமாண்டமான கோவில் அயோத்தியில் கட்டப்படும். கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறக்கட்டளை மூலம் இந்த கோவில் கட்டப்படும். 2024-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் இருக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
நூற்றாண்டு பழமையான பிரச்சினையில் சமநிலையான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதாக கூறிய விஷ்ணு கோக்ஜே, எனவே இந்த தீர்ப்பால் எந்த பிரிவினருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X