என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்துறை மந்திரி அமித் ஷா சோமநாதரை தரிசனம் செய்தார்
Byமாலை மலர்19 Oct 2019 2:21 PM GMT (Updated: 19 Oct 2019 2:21 PM GMT)
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோவிலுக்கு சென்ற உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மாலை சாமி தரிசனம் செய்தார்.
அகமதாபாத்:
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் வரும் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதால், பாஜகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
இந்நிலையில், இரு மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று குஜராத் மாநிலம் சென்றார். அங்கு கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அமித் ஷா சோமநாதருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் பிரசாரம் நிறைவடைந்ததும் அமித் ஷா குஜராத்தின் சோமநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X