search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துர்கா பூஜை பந்தல்
    X
    துர்கா பூஜை பந்தல்

    கொல்கத்தாவில் மத நல்லிணக்கம் - துர்கா பூஜை பந்தலில் பாங்கோசை, தேவாலய மணியோசை

    துர்கா பூஜை விழாவையொட்டி கொல்கத்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பூஜை பந்தலில் வேத மந்திரங்களுடன் மசூதியின் பாங்கோசை, கிறிஸ்தவ தேவாலயத்தின் மணியோசையும் இணைந்து ஒலிக்கின்றது.
    கொல்கத்தா:

    நவராத்திரி, தசரா, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு வெகு சிறப்பாக துர்கா பூஜை நடைபெற்று வருகிறது.

    மும்பை நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தல்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் துர்கை அம்மனை வழிபாடு செய்தனர்.

    இந்நிலையில், கொல்கத்தா நகரின் 33 பெலியாகட்டா பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பூஜை பந்தலில் வேத மந்திரங்களுடன் மசூதியின் பாங்கோசை, கிறிஸ்தவ தேவாலயத்தின் மணியோசையும் இணைந்து ஒலிக்கின்றது. மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழும் இந்த பூஜை பந்தல் ஊடகங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி வருகின்றது.

    பூஜை பந்தலில் மசூதி, சர்ச் பொம்மைகள்

    அதேவேளையில், இந்த செயலுக்காக மேற்படி துர்கா பூஜை பந்தல் அமைப்பாளர்கள் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×