என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப்: இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல்
Byமாலை மலர்18 Sep 2019 3:21 AM GMT (Updated: 18 Sep 2019 3:21 AM GMT)
இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் போதைப்பொட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அமிர்தரஸ்:
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எல்லை வழியாக கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. அப்படி கடத்தப்படும் போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, இந்தியா-பாகிஸ்தான் எல்லை வேலியை ஒட்டியுள்ள நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி அஞ்சலா நகரின் பூங்கா கிராமத்தில் 7.5 கிலோ ஹெராயின் மற்றும் போதைப்பொருள் விற்ற பணம் ரூ.28 லட்சத்துடன் சாம்ஷர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
சாம்ஷர் சிங் கொடுத்த தகவலின் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நேற்று 13.72 கிலோ ஹெராயினை அமிர்தசரஸ் புறநகர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் போதைக் கடத்தல் கும்பல், இந்திய பகுதிக்குள் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக அனுப்பி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எல்லை வழியாக கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. அப்படி கடத்தப்படும் போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, இந்தியா-பாகிஸ்தான் எல்லை வேலியை ஒட்டியுள்ள நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி அஞ்சலா நகரின் பூங்கா கிராமத்தில் 7.5 கிலோ ஹெராயின் மற்றும் போதைப்பொருள் விற்ற பணம் ரூ.28 லட்சத்துடன் சாம்ஷர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
சாம்ஷர் சிங் கொடுத்த தகவலின் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நேற்று 13.72 கிலோ ஹெராயினை அமிர்தசரஸ் புறநகர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் போதைக் கடத்தல் கும்பல், இந்திய பகுதிக்குள் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக அனுப்பி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X