search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெராயின் பறிமுதல்"

    • டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மும்பை நவசேவா துறைமுகத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • வழக்கமாக குஜராத் மாநிலத்தில்தான் போதைப்பொருள் பிடிபடுவது வழக்கம். தற்போது மும்பையில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    மும்பை நவசேவா துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் ஹெராயின் கடத்த இருப்பதாக டெல்லி போலீசின் சிறப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மும்பை நவசேவா துறைமுகத்துக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின்போது கண்டெய்னரில் ஹெராயின் கடத்தப்பட இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து கண்டெய்னரில் இருந்த ஹெராயினை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 22 ஆயிரம் கிலோ ஹெராயின் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.1,725 கோடியாகும்.

    சமீப காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஹெராயின் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்கமாக குஜராத் மாநிலத்தில்தான் போதை பொருள் பிடிபடுவது வழக்கம். தற்போது மும்பையில் ரூ.1,725 கோடியில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசாரும், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.112 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியிருப்பது இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கைதான வாலிபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பெங்களூரு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அந்த ரெயிலில் சந்தேகப்படும்படி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் 2 டிராலி பைகளில் 16 கிலோ எடையுள்ள ஹெராயின் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் எத்தியோப்பாவிலிருந்து பெங்களூருக்கு விமான மூலம் போதைப் பொருளை கடத்தி வந்துள்ளார்.

    எத்தியோப்பியன் விமானத்தில் பெங்களூரு வந்த அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களுக்கு தெரியாமல் இந்த போதைப் பொருட்களை அவர் கடத்திக் கொண்டு வந்துள்ளார்.

    வியாபாரம் தொடர்பான விசாவில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு சென்றிருந்த அவர் ஊருக்கு வருவதற்காக விமானத்தில் நாடு திரும்பினார். டெல்லி சென்று அந்த போதைப்பொருட்களை ஒப்படைக்க இருந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

    இந்த போதைப்பொருட்களை கொடுத்து அனுப்பிய கும்பல் யார்? இதற்காக எவ்வளவு பணம் கைமாறியது என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.112 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியிருப்பது இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கைதான வாலிபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ரெயில் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோசப் பாட்ரிக்கை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
    • ஜோசப் பாட்ரிக் வயிற்றில் ஏதோ மர்ம பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தான்சானியா நாட்டைச்சேர்ந்த ஜோசப் பாட்ரிக் (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர், உகாண்டாவில் இருந்து துபாய் வழியாக சுற்றுலா பயணியாக சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் எதுவும் இல்லை.

    பின்னர் ஜோசப் பாட்ரிக்கை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் ஏதோ மர்ம பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. உடனடியாக அவரை 'ஸ்கேன்' செய்து பார்த்தனர். அதில் அவரது வயிற்றில் அதிக அளவில் மாத்திரைகள் இருப்பதாக தெரியவந்தது.

    ஜோசப் பாட்ரிக்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து, அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றில் மறைத்து வைத்து கடத்திய மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அதில், போதை பொருளை 86 மாத்திரை கேப்சூலில் அடைத்து, அதனை விழுங்கி வயிற்றில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கேப்சூல்களை ஆய்வுக்காக அனுப்பியதில் அவை ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது. ரூ.8 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 266 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தான்சானியா நாட்டு வாலிபர் ஜோசப் பாட்ரிக்கை கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    கடந்த மே மாதம் சென்னை மற்றும் கோவையில் இதேபோல் சினிமா படபாணியில் ரூ.13 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது சென்னையில் அதே பாணியில் போதை மாத்திரைகள் கடத்தி வந்த தான்சானியா நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×