என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்
Byமாலை மலர்23 Aug 2019 4:51 AM GMT (Updated: 23 Aug 2019 9:20 AM GMT)
சென்னையில் மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.
அமராவதி:
தமிழகத்தில் இருந்து பக்தர்கள் அதிகமாக திருப்பதிக்கு வருகை தருவதால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்டும் திட்டம் குறித்து திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விரைவில் கோவில் கட்டும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்குவோம். ஏற்கனவே கன்னியாகுமரியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளோம். இருப்பினும் சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்ட தற்போது திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான இடம் குறித்த விவரங்கள் தேவைப்பட்டால் ஆந்திர முதல்வர், தமிழக முதல்வரிடத்தில் பேசுவார்’ என கூறினார். இதனையடுத்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ் கூறுகையில், ‘சென்னையில் பெரிய இடம் கிடைப்பது கடினமான ஒன்று.
சில வருடங்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிய கோவில் கட்ட இடம் அளிப்பதாக உறுதியளித்தார். அப்போது அது நடக்கவில்லை. இப்போது மீண்டும் நாங்கள் இடத்திற்காக காத்திருக்கிறோம்’ என கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து பக்தர்கள் அதிகமாக திருப்பதிக்கு வருகை தருவதால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்டும் திட்டம் குறித்து திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இதனால், சென்னையில் மிகப்பெரிய விசாலமான ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம். இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.
இதைத்தொடர்ந்து விரைவில் கோவில் கட்டும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்குவோம். ஏற்கனவே கன்னியாகுமரியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளோம். இருப்பினும் சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்ட தற்போது திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான இடம் குறித்த விவரங்கள் தேவைப்பட்டால் ஆந்திர முதல்வர், தமிழக முதல்வரிடத்தில் பேசுவார்’ என கூறினார். இதனையடுத்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ் கூறுகையில், ‘சென்னையில் பெரிய இடம் கிடைப்பது கடினமான ஒன்று.
சில வருடங்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிய கோவில் கட்ட இடம் அளிப்பதாக உறுதியளித்தார். அப்போது அது நடக்கவில்லை. இப்போது மீண்டும் நாங்கள் இடத்திற்காக காத்திருக்கிறோம்’ என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X