என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடல்நிலையில் முன்னேற்றம் - வீட்டில் தேசிய கொடி ஏற்றிய அத்வானி
Byமாலை மலர்15 Aug 2019 9:59 PM GMT (Updated: 15 Aug 2019 9:59 PM GMT)
அத்வானியின் உடல்நிலையில் நேற்று காலை முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி (வயது 91), ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவையொட்டி தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக அத்வானி அவதிப்பட்டு வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சுதந்திர தின விழாவையொட்டி தனது இல்லத்தில் அத்வானி தேசிய கொடி ஏற்ற மாட்டார் என்றும், கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்றும், அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அத்வானியின் உடல்நிலையில் நேற்று காலை முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் பங்கேற்கும் சுதந்திர தின விழாவில் அத்வானி ஆண்டுதோறும் தவறாமல் பங்கேற்பது வழக்கம். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று பங்கேற்கவில்லை.
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி (வயது 91), ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவையொட்டி தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக அத்வானி அவதிப்பட்டு வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சுதந்திர தின விழாவையொட்டி தனது இல்லத்தில் அத்வானி தேசிய கொடி ஏற்ற மாட்டார் என்றும், கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்றும், அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அத்வானியின் உடல்நிலையில் நேற்று காலை முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் பங்கேற்கும் சுதந்திர தின விழாவில் அத்வானி ஆண்டுதோறும் தவறாமல் பங்கேற்பது வழக்கம். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று பங்கேற்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X