என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது
Byமாலை மலர்18 July 2019 8:25 AM GMT (Updated: 18 July 2019 8:25 AM GMT)
நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் உறவினர் ஒருவரை, பணம் பறிப்பு வழக்கில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை:
மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்பர். இவரது மகன் ரிஸ்வான் கஸ்கர் நேற்று இரவு மும்பையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
பணம் பறிப்பு வழக்கில் அவரை கைது செய்துள்ளனர். நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது அவரை கைது செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தாவூத் இப்ராகிமின் கூட்டாளிக்கு மிக நெருக்கமான அகமது ரஸா வதாரியா என்பவரை மும்பை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது ரிஸ்வான் கஸ்பரின் பெயரை கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் ரிஸ்வான் கஸ்பரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X