என் மலர்
செய்திகள்

விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை
விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் மீது மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் சோன்பூரைச் சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா. வக்கீலான இவர், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். இவர் நேற்று மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஜெத்வாரா என்ற இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், ஓம் மிஸ்ராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த நபரை காணவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் சோன்பூரைச் சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா. வக்கீலான இவர், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். இவர் நேற்று மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஜெத்வாரா என்ற இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், ஓம் மிஸ்ராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த நபரை காணவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story