search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் சிக்கியப் பெண்
    X
    ரெயிலில் சிக்கியப் பெண்

    ரெயில் சக்கரத்தில் சிக்காமல் பெண்ணை காப்பாற்றிய காவலர்

    குஜராத் மாநிலத்தில் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சக்கரத்தில் சிக்கியப் பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
    அகமதாபாத்:

    அகமதாபாத் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் அவசர அவசரமாக வந்து ஏறியுள்ளார். ஏறிய அவர் தடுமாறியதில் கீழே விழுந்தார்.

    சக்கரத்தின் இடுக்கில் சிக்க இருந்த அவரை, அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட ரெயில்வே காவலர் ஒருவர் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றார். மீண்டும் அந்த பெண் விழுந்துள்ளார்.



    உடனடியாக அந்த காவலர் அவரை நடைப்பதைக்கு மீட்டு கொண்டு வந்தார். பின்னர் மயக்க நிலையில் இருந்த அந்த பெண் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டார். இவரது இந்த செயலை அங்கு இருந்த மக்கள் அவரை வெகுவாக பாராட்டினர். 
    Next Story
    ×