என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்ஜம் புனித நீரை கொண்டு வர தடையில்லை - ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு
Byமாலை மலர்9 July 2019 12:42 PM GMT (Updated: 9 July 2019 12:42 PM GMT)
இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
புதுடெல்லி
இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஹஜ் புனித பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் கிணற்று நீரை எடுத்து வருவதை இஸ்லாமியர்கள் வழக்கமான வைத்துள்ளனர்.
இந்த நிலையில், மக்காவுக்கு சேவை அளிக்கும் ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களில் ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
மக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களில் கூடுதலாக 5 கிலோ வரை கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூடுதல் அனுமதி பயணிகளுடன் கொண்டு வரும் கைப்பை சுமைகளுக்கு பொருந்தாது என ஏர் இந்தியா இன்று வெளியிட்ட விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஹஜ் புனித பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் கிணற்று நீரை எடுத்து வருவதை இஸ்லாமியர்கள் வழக்கமான வைத்துள்ளனர்.
இந்த நிலையில், மக்காவுக்கு சேவை அளிக்கும் ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களில் ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
மக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களில் கூடுதலாக 5 கிலோ வரை கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூடுதல் அனுமதி பயணிகளுடன் கொண்டு வரும் கைப்பை சுமைகளுக்கு பொருந்தாது என ஏர் இந்தியா இன்று வெளியிட்ட விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X