என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேலிப்பொருளாக மாறிவிட்ட ஆம் ஆத்மி கட்சி- ஜே.பி.நட்டா விமர்சனம்
Byமாலை மலர்29 Jun 2019 10:10 AM GMT (Updated: 29 Jun 2019 10:10 AM GMT)
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கேலிக்குரிய கட்சியாக மாறிவிட்டது என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்தார்.
புதுடெல்லி:
டெல்லி மாநில பாஜக செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் 2015ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், உண்மையில் அவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கி விட்டனர்.
அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) நகைப்புக்கு உரியவர்களாக மாறிவிட்டனர். நாட்டின் தலைநகரான டெல்லி மீது தீவிர பார்வை கொண்ட தலைமைதான் தேவை. அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜே.பி. நட்டா தனது 30 நிமிட உரையில், மோடி அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டதுடன், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றிக்கு பாடுபட்ட மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X