என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு நலத்திட்ட பயனாளிகளிடம் கமிஷன் வாங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை - மம்தா பானர்ஜி அரசு முடிவு
Byமாலை மலர்26 Jun 2019 1:28 AM GMT (Updated: 26 Jun 2019 1:28 AM GMT)
அரசு நலத்திட்ட உதவிகளுக்கு கமிஷன் வாங்கிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் முற்றுகையிட்டு பல்வேறு நலத்திட்டங்களில் கமிஷனாக பெற்ற பணத்தை திருப்பித்தரும்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். கட்சியின் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, “பயனாளிகளிடம் இருந்து கமிஷன் வாங்கியவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள். ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 25 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாக சிலர் கூறுகின்றனர். இதையெல்லாம் நிறுத்திவிடுங்கள். எனது கட்சிக்கு திருடர்கள் தேவையில்லை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அரசு நலத்திட்ட உதவிகளுக்கு கமிஷன் வாங்கிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீது இ.பி.கோ. 409 சட்டத்தின்கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்படும். இதில் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேற்குவங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் முற்றுகையிட்டு பல்வேறு நலத்திட்டங்களில் கமிஷனாக பெற்ற பணத்தை திருப்பித்தரும்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். கட்சியின் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, “பயனாளிகளிடம் இருந்து கமிஷன் வாங்கியவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள். ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 25 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாக சிலர் கூறுகின்றனர். இதையெல்லாம் நிறுத்திவிடுங்கள். எனது கட்சிக்கு திருடர்கள் தேவையில்லை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அரசு நலத்திட்ட உதவிகளுக்கு கமிஷன் வாங்கிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீது இ.பி.கோ. 409 சட்டத்தின்கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்படும். இதில் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X