search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’யில்தான் உள்ளது -மம்தா பானர்ஜி தாக்கு
    X

    இந்தியா 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’யில்தான் உள்ளது -மம்தா பானர்ஜி தாக்கு

    இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’யில் இருப்பதாக மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவில் 1975ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி, 21- மாத காலத்திற்கு இந்தியக் குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி, நெருக்கடி நிலை(எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது.

    இந்திய குடியரசு வரலாற்றில் இந்த நெருக்கடி நிலை காலம், சர்ச்சை மிகுந்ததாக இன்றளவும் கூறப்படுகிறது.

    இந்த நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 44 ஆண்டுகள் ஆகின்றன. இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.



    இன்று நெருக்கடி நிலையை நினைவுப்படுத்தி மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா, ‘சூப்பர் எமர்ஜென்சி’யில் தான் இருந்து வருகிறது.

    நம் இந்திய வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஜனநாயக நிறுவனங்களை காக்க போராட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×