என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் ஓட்டலில் விஷவாயு தாக்கி 7 பேர் பலியான விவகாரம்: இருவர் கைது
Byமாலை மலர்19 Jun 2019 5:20 PM GMT (Updated: 19 Jun 2019 5:20 PM GMT)
குஜராத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 7 பேர் பலியான வழக்கில் ஓட்டல் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளிகள் சிலர் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
உணவகத்தின் உரிமையாளர்களான அப்பாஸ் போரானியா, அவரது சகோதரரும் ஓட்டல் மேனேஜருமான இபாட் போரானியா தலைமறைவாயினர். இதையடுத்து, தலைமறைவான அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த ஓட்டல் உரிமையாளர்கள் இருவரும் அவர்களது வீட்டில் மறைந்திருந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X