என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற விவசாயி
Byமாலை மலர்18 Jun 2019 11:09 AM GMT (Updated: 18 Jun 2019 11:09 AM GMT)
விண்ணப்பித்து 40 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கப்படாத விரக்தியில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்தானா:
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வடோடா என்கிற குக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980-ம் ஆண்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் 40 ஆண்டுகளாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி ஸ்ரீராம் கராத்தேயின் பேரன் ஈஸ்வர் கராத்தே, புல்தானா மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக புல்தானா மின்சாரத்துறை அதிகாரி கூறியதாவது:- "1980-ல் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஸ்ரீராம் கராத்தே இறந்துவிட்டார். இதையடுத்து, 2006-ம் ஆண்டு நிலுவை தொகையை செலுத்துமாறு ஈஸ்வர் கராத்தேவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நிலுவை தொகையை செலுத்த தவறிவிட்டார். ஈஸ்வர் கராத்தே நிலுவை தொகையை செலுத்தினால் நாங்கள் மின் இணைப்பை வழங்குவோம்" இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வடோடா என்கிற குக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980-ம் ஆண்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் 40 ஆண்டுகளாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி ஸ்ரீராம் கராத்தேயின் பேரன் ஈஸ்வர் கராத்தே, புல்தானா மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து விவசாயி ஈஸ்வர் கராத்தே கூறுகையில், "மின்சார இணைப்பு கோரி எனது தாத்தா கடந்த 1980-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். 40 ஆண்டுகளாகியும் தற்போதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனில்லை" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக புல்தானா மின்சாரத்துறை அதிகாரி கூறியதாவது:- "1980-ல் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஸ்ரீராம் கராத்தே இறந்துவிட்டார். இதையடுத்து, 2006-ம் ஆண்டு நிலுவை தொகையை செலுத்துமாறு ஈஸ்வர் கராத்தேவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நிலுவை தொகையை செலுத்த தவறிவிட்டார். ஈஸ்வர் கராத்தே நிலுவை தொகையை செலுத்தினால் நாங்கள் மின் இணைப்பை வழங்குவோம்" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X