search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி 9-ந்தேதி திருப்பதி வருகை
    X

    ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி 9-ந்தேதி திருப்பதி வருகை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதிக்கு வருகை தருகிறார்.

    டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டாவில் இறங்கி, அங்கிருந்து காரில் திருப்பதிக்கு வருகிறார். சாமி தரிசனம் செய்து விட்டு அன்று மாலை 4 மணியளவில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் தேர்தலின் போது திருப்பதியில் பிரசாரம் செய்ய வந்திருந்தார். அப்போது திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    பின்னர் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.


    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மதியம் திருப்பதிக்கு வருகிறார். நாளை காலை 6 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
    Next Story
    ×