search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை
    X

    கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை

    தமிழகத்தில் உருவான கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நாளை வருகின்றனர். #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

    அந்த சமயத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய  மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.  அவருக்கு பதிலளித்த பிரதமரும்  மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாக  உறுதி அளித்து இருந்தார்.

    இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு நாளை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மத்திய  பேரிடர் மேலாண்மை இயக்குனர் தலைமையில்  4 பேர் கொண்ட குழு நாளை தமிழகம் வருகிறது. முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்தும் இந்த  குழு பின்னர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகிறது. #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    Next Story
    ×