search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே தேசிய எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் ஜாகூ பகுதியில் உள்ள கான்சாகீப் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டனர். அவர்களை பார்த்ததும்  பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கரதுப்பாக்கி சண்டை நடந்தது.



    இதில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். #JammuKashmir #Encounter
    Next Story
    ×