search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் 3 பேர் உயிரிழப்பு
    X

    உ.பி.யில் ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் 3 பேர் உயிரிழப்பு

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் உள்ள தொட்டியில் விழுந்து ஆலை உரிமையாளர், அவரது மகன் உள்பட மூன்று பேர் பரிதாபமக உயிரிழந்தனர். #UPpicklefactoryDeath
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஊறுகாய் தயாரிப்பு ஆலையில்,  ஊறுகாய் தாயாரிப்பதற்கு என ரசாயணம் கலந்த காய்கறிகள் இருந்த தொட்டியில் விழுந்து ஆலை உரிமையாளர், அவரது மகன் மற்றும் தொழிலாளர் உள்பட 3 பேர் பரிதாபமக உயிரிழந்துள்ளனர்.

    ரசாயனம் கலந்த தொட்டியை எட்டிப்பார்த்த போது நெடியால் பாதிக்கப்பட்டு தந்தையும், மகனும் தொட்டிக்குள் மழங்கி விழுந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளியும் பரிதமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். உயிரிழப்பு ஏற்பட்ட ஊறுகாய் ஆலை முறையான அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். #UPpicklefactoryDeath
    Next Story
    ×