search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் ரூ.60 - நவீன் பட்நாயக் அறிவிப்பு
    X

    ஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் ரூ.60 - நவீன் பட்நாயக் அறிவிப்பு

    ஒடிசாவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் ரூ.60 வீதம் 7 நாட்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #Odisha #NaveenPatnaik
    புபனேஷ்வர்:

    ஒடிசாவின் பத்ராக், ஜாஜ்பூர் மற்றும் கேந்த்ராபாரா பகுதிகள் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. 40 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 நாட்களுக்கு தினமும் ரூ.60 வழங்கவும், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.45 வழங்கவும் உத்தரவிட்டார். 90 டன் அரிசி, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவை வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×