search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலுவா பஸ் நிலையம் நீரில் மூழ்கி இருக்கும் காட்சி.
    X
    ஆலுவா பஸ் நிலையம் நீரில் மூழ்கி இருக்கும் காட்சி.

    கேரளாவில் படிப்படியாக மழையின் தாக்கம் குறையும்- இந்திய வானிலை மையம் தகவல்

    கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #KeralaRain #KeralaFlood
    புதுடெல்லி:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் உருக்குலைந்து விட்டது. தொடர்ந்து நேற்றும் மழை கொட்டியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் கேரளாவில் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று காலை வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு:-

    கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் வாய்ப்பு உள்ளது. கேரளா மீது கடந்த 2 நாட்களாக எந்த மேலடுக்கு சுழற்சியும் இல்லை. வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் பிறகு கேரளாவில் மீண்டும் மழை பெய்யும்.


    மேலும் கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு அரபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #KeralaRain #KeralaFlood
    Next Story
    ×