search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
    X

    பீகாரில் லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி

    பீகார் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


    பாட்னா :

    பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் அருகே இருக்கும் சிகாந்த்ரா எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரியில் மோதி 
    சொகுசு கார் விபத்துக்குள்ளானது. 

    இதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக நேற்று பிறந்த பெண் குழந்தை மட்டும் விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தது. 

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நிவாஸ் பாண்டே மற்றும் சீமா தேவி தம்பதியருக்கு நேற்று வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, தாய் மற்றும் குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வாடகை கார் மூலம் உறவினர் சகிதம் பயணித்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×