என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
Byமாலை மலர்27 July 2018 8:34 AM GMT (Updated: 27 July 2018 8:34 AM GMT)
பீகார் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பாட்னா :
பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் அருகே இருக்கும் சிகாந்த்ரா எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரியில் மோதி
சொகுசு கார் விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக நேற்று பிறந்த பெண் குழந்தை மட்டும் விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
நிவாஸ் பாண்டே மற்றும் சீமா தேவி தம்பதியருக்கு நேற்று வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, தாய் மற்றும் குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வாடகை கார் மூலம் உறவினர் சகிதம் பயணித்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X