என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா மீண்டும் டோக்லாமில் பணியை தொடங்கியதாக அமெரிக்கா தகவல் - மத்திய அரசு மறுப்பு
Byமாலை மலர்26 July 2018 4:15 PM GMT (Updated: 26 July 2018 4:15 PM GMT)
டோக்லாம் பகுதியில் சீனா மீண்டும் கட்டுமான பணியை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா கூறிய தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. #Doklam
புதுடெல்லி :
இந்தியா, பூடான், சீனா நாடுகளின் முச்சந்திப்பான டோக்லாமில் சீன ராணுவம் அடாவடியாக கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இதை, இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் மோதல் போக்கு நிலவியது.
டோக்லாமில் சீனாவும், இந்தியாவும் 73 நாட்கள் படைகளை எதிரெதிரே நிறுத்திய விவகாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணிகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அதை பூட்டான் மற்றும் இந்தியா தடுக்க முயற்சி செய்யவில்லை என அமெரிக்காவுக்கான தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டோக்லாம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் மாநிலங்களவையில் பேசுகையில், டோக்லாமில் மோதல் போக்கு நடைபெற்ற இடத்தில் சீனா எந்தஒரு கட்டமைப்பு பணியையும் மேற்கொள்ளவில்லை, அங்கு இரு நாடுகள் தரப்பிலும் எல்லை நிலைபாடு சரியாக பின்பற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவு மேம்பட எல்லையில் அமைதி என்பது முக்கியமானது என்பதை சீனாவிடம் உயர்மட்ட அளவில் இந்தியா பேசியுள்ளது எனவும் விகே சிங் குறிப்பிட்டார். #Doklam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X