search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி
    X

    குஜராத் சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

    குஜராத் மாநிலத்தில் எதிரே வந்த லாரியின் மீது மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அகமதாபாத் ::

    குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்கோட்-மோர்பி தேசிய நெடுஞ்சாலையில் தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லாரியின் மீது சொகுசு கார் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் பற்றிய தீ வேகமாக கார் முழுதும் பரவியது.

    இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
    Next Story
    ×