search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமுகமான பாராளுமன்ற கூட்டத்தொடர் - அனைத்து கட்சியினரிடம் துணை ஜனாதிபதி வலியுறுத்தல்
    X

    சுமுகமான பாராளுமன்ற கூட்டத்தொடர் - அனைத்து கட்சியினரிடம் துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இடையூறுகள் இன்றி நடத்த ஒத்துழைக்குமாறு இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் துணை ஜனாதிபதி சந்தித்து வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

    இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.


    இதேபோல், துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்சபை சபாநாயகருமான வெங்கய்யா நாயுடு, டெல்லியில் இன்று மாலை அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராஜா மற்றும் இதர எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இடையூறுகள் இன்றி நடத்த ஒத்துழைக்குமாறு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் துணை ஜனாதிபதி வலியுறுத்தினார். #VenkaiahNaidu #allpartymeeting #ParliamentMonsoonSession
    Next Story
    ×