search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்கண்டில் குடியை கைவிடுமாறு கூறிய மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை
    X

    ஜார்கண்டில் குடியை கைவிடுமாறு கூறிய மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

    ஜார்கண்ட் மாநிலம் மொராபடி பகுதியில் குடியை கைவிடுமாறு கூறிய மகளின் கழுத்தை அறுத்து தந்தையே கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் மொராபடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் யாதவ். இவர் பல ஆண்டுகளாக மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்து வருகிறார். இதனால் அவர் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அவரது மகளான சுஜாதா முண்டா (18), குடியை விடுமாறு தந்தையிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

    நேற்றும் இதனால் தந்தைக்கும், மகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் பிரதீப் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இரவு சண்டை ஏறபட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் இன்று காலை தனது மகளின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுஜாதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிரதீப் யாதவை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×