என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமிர்தசரஸில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 7 பேர் பலி
Byமாலை மலர்18 Jun 2018 6:02 AM GMT (Updated: 18 Jun 2018 6:02 AM GMT)
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சண்டிகர் :
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே இருக்கும் கால்சியான் எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரு லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த சொகுசு கார், இந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், காரில் பயணித்த 8 பேரில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 வயது குழந்தை மட்டும் விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே இருக்கும் கால்சியான் எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரு லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த சொகுசு கார், இந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், காரில் பயணித்த 8 பேரில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 வயது குழந்தை மட்டும் விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X