search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமிர்தசரஸில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 7 பேர் பலி
    X

    அமிர்தசரஸில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 7 பேர் பலி

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    சண்டிகர் :

    பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே இருக்கும் கால்சியான் எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரு லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த சொகுசு கார், இந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

    இதில், காரில் பயணித்த 8 பேரில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 வயது குழந்தை மட்டும் விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்தது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×