என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்து விட்டது - அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்து விட்டது - அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806090129503648_AIMIM-President-Asaduddin-Owaisi-says-congress-is-finished_SECVPF.gif)
X
காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்து விட்டது - அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு
By
மாலை மலர்8 Jun 2018 7:59 PM GMT (Updated: 8 Jun 2018 7:59 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
ஐதராபாத்:
மத்தியப்பிரதேசம் மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாக்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவில் பங்கேற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்துவிட்டது என ஐதராபாத் எம்.பி ஓவைசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் இருந்தவரும், இந்திய ஜனாதிபதியாக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையக விழாவுக்கு சென்றுள்ளார். இனி காங்கிரசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என குற்றம் சாட்டியுள்ளார். #AsaduddinOwaisi #PranabMukherjee #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)