search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்காததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
    X

    மோட்டார் சைக்கிள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்காததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்காததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UPboysuicide
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனை அவரது பெற்றோர் மோட்டார் சைக்கில் ஓட்டக்கூடாது என கண்டித்துள்ளனர். இதனால் சிறுவன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், நேற்று சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் ஓட்ட மறுத்த காரணத்திற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UPboysuicide

    Next Story
    ×