என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - மியான்மர் எல்லையில் ரூ.5 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது
Byமாலை மலர்11 March 2018 9:14 AM GMT (Updated: 11 March 2018 9:14 AM GMT)
மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ரூ.4.8 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது. #Manipur #Goldbarsseized
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ரூ.4.8 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.
மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவிலான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை தடுப்பதற்காக அசாம் ரைபிள்ஸ் எனும் சிறப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் டெங்நவ்பால் மாவட்டத்தில் உள்ள இம்பால் - மோரே நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோரேவில் இருந்து இம்பால் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், வாகன ஓட்டுனரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாகனத்தில் 97 தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.4.8 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Manipur #Goldbarsseized
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X