என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான்: ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற நெதர்லாந்து நாட்டவர் பலி
Byமாலை மலர்2 Jan 2018 9:47 AM GMT (Updated: 2 Jan 2018 9:47 AM GMT)
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபுரில் தவறாக வேறு ரெயிலில் ஏறிய நெதர்லாந்து நாட்டவர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
ஜெய்ப்பூர்:
நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த எரிக் ஜோஹன்னேஸ் மற்றும் அவரது பிரிட்டன் நண்பர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள சவாய் மதோபுருக்கு நேற்று வந்த அவர்கள் திரும்ப ஆக்ரா செல்வதற்காக ரெயில் நிலையம் வந்த அவர்கள் தவறுதலாக புதுடெல்லிக்கு செல்லும் ரெயிலில் ஏறிவிட்டனர்.
ரெயில் புறப்பட்டதும் தவறாக ஏறிவிட்டதை உணர்ந்த அவர்கள் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கினர். இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த எரிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பிரிட்டன் நாட்டவர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த எரிக் ஜோஹன்னேஸ் மற்றும் அவரது பிரிட்டன் நண்பர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள சவாய் மதோபுருக்கு நேற்று வந்த அவர்கள் திரும்ப ஆக்ரா செல்வதற்காக ரெயில் நிலையம் வந்த அவர்கள் தவறுதலாக புதுடெல்லிக்கு செல்லும் ரெயிலில் ஏறிவிட்டனர்.
ரெயில் புறப்பட்டதும் தவறாக ஏறிவிட்டதை உணர்ந்த அவர்கள் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கினர். இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த எரிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பிரிட்டன் நாட்டவர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X