search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான்: ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற நெதர்லாந்து நாட்டவர் பலி
    X

    ராஜஸ்தான்: ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற நெதர்லாந்து நாட்டவர் பலி

    ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபுரில் தவறாக வேறு ரெயிலில் ஏறிய நெதர்லாந்து நாட்டவர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
    ஜெய்ப்பூர்:

    நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த எரிக் ஜோஹன்னேஸ் மற்றும் அவரது பிரிட்டன் நண்பர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள சவாய் மதோபுருக்கு நேற்று வந்த அவர்கள் திரும்ப ஆக்ரா செல்வதற்காக ரெயில் நிலையம் வந்த அவர்கள் தவறுதலாக புதுடெல்லிக்கு செல்லும் ரெயிலில் ஏறிவிட்டனர்.

    ரெயில் புறப்பட்டதும் தவறாக ஏறிவிட்டதை உணர்ந்த அவர்கள் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கினர். இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த எரிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பிரிட்டன் நாட்டவர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×