என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எமரால்டு கப்பலில் மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா? தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட சுஷ்மா
Byமாலை மலர்18 Nov 2017 11:51 PM GMT (Updated: 18 Nov 2017 11:51 PM GMT)
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய எமரால்டு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா என மணிலாவில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் சுஷ்மா சுவராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.
புதுடெல்லி:
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய எமரால்டு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா என மணிலாவில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் சுஷ்மா சுவராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.
ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33 ஆயிரம் டன் எடையுள்ள அந்த சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்றபோது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் கடந்த மாதம் நீரில் மூழ்கியது.
கப்பலில் இருந்த 26 இந்தியர்களில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 10 இந்தியர்களை தேடும் பணியில் ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படையை சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டன.
இந்நிலையில், எமரால்டு கப்பலில் இருந்து நேற்று ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. அது அழுகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மணிலாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அந்த உடல் இந்தியருடையதா டி.என்.ஏ சோதனை நடத்தும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், அவர் டுவிட்டரில் கூறுகையில், பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் காணாமல் போன இந்தியர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய எமரால்டு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல் இந்தியருடையதா என மணிலாவில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் சுஷ்மா சுவராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.
ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33 ஆயிரம் டன் எடையுள்ள அந்த சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்றபோது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் கடந்த மாதம் நீரில் மூழ்கியது.
கப்பலில் இருந்த 26 இந்தியர்களில் 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 10 இந்தியர்களை தேடும் பணியில் ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படையை சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டன.
இந்நிலையில், எமரால்டு கப்பலில் இருந்து நேற்று ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. அது அழுகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மணிலாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அந்த உடல் இந்தியருடையதா டி.என்.ஏ சோதனை நடத்தும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், அவர் டுவிட்டரில் கூறுகையில், பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் காணாமல் போன இந்தியர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X