search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identification"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
    • கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கீழ ஆம்பூர் ஊராட்சி மன்றம் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் கொலை செய்ய ப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரை பார்த்த போலீசார் புகைப்படம் எடுத்ததோடு, அவரை மதுரைக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மீண்டும் கடையத்திற்கு வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தற்போது வரை அவர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்பது தெரிய வில்லை. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்தை அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ×