என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார்: பிரிட்டன் தம்பதியினரை தாக்கி திருட முயன்ற இருவர் கைது
Byமாலை மலர்7 Nov 2017 12:02 PM GMT (Updated: 7 Nov 2017 12:02 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜெர்மன் சுற்றுலா தம்பதியினர் மீதான தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பீகாரில் பிரிட்டன் தம்பதியினரை தாக்கி உடமைகளை திருட முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
பாட்னா:
பிரிட்டனைச் சேர்ந்த மத்யூ மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி இருவரும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். நேற்று, ஹரித்துவாரில் இருந்து படகு மூலம் கல்கத்தாவுக்கு சென்றுள்ளனர். பீகாரில் உள்ள பண்டாரக் என்ற இடத்தில் ஓய்வுக்காக இறங்கிய போது அங்கிருந்த இருவர்கள் தம்பதியினரை தாக்கி அவர்களின் உடமைகளை திருட முயன்றுள்ளனர்.
இதையடுத்து, சுற்றுலா தம்பதியினர் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால், திருட முயன்ற இருவரும் ஓடிவிட்டனர். தாக்கப்பட்டது தொடர்பாக போலீசில் புகாரளித்து விட்டு தம்பதியினர் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்றிரவு இருவரையும் கைது செய்தனர். கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஜெர்மனி தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனைச் சேர்ந்த மத்யூ மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி இருவரும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். நேற்று, ஹரித்துவாரில் இருந்து படகு மூலம் கல்கத்தாவுக்கு சென்றுள்ளனர். பீகாரில் உள்ள பண்டாரக் என்ற இடத்தில் ஓய்வுக்காக இறங்கிய போது அங்கிருந்த இருவர்கள் தம்பதியினரை தாக்கி அவர்களின் உடமைகளை திருட முயன்றுள்ளனர்.
இதையடுத்து, சுற்றுலா தம்பதியினர் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால், திருட முயன்ற இருவரும் ஓடிவிட்டனர். தாக்கப்பட்டது தொடர்பாக போலீசில் புகாரளித்து விட்டு தம்பதியினர் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்றிரவு இருவரையும் கைது செய்தனர். கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஜெர்மனி தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X