என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தந்தையின் டீ கடையில் வேலை செய்யும் பளுதூக்கும் வீராங்கனை - வேலை கொடுக்குமா அரசு? தந்தையின் டீ கடையில் வேலை செய்யும் பளுதூக்கும் வீராங்கனை - வேலை கொடுக்குமா அரசு?](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705112121356899_Powerlifting-national-champion-works-at-her-fathers-tea-shop_SECVPF.gif)
X
தந்தையின் டீ கடையில் வேலை செய்யும் பளுதூக்கும் வீராங்கனை - வேலை கொடுக்குமா அரசு?
By
மாலை மலர்11 May 2017 3:38 PM GMT (Updated: 11 May 2017 3:51 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பளுதூக்கும் போட்டிகளில் பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்ற அரியானா வீராங்கனை தந்தையின் டீ கடையில் வேலை செய்து வருகின்றார்.
ராஞ்சி:
அரியானா மாநிலம் சோனாபட் பகுதியை சேர்ந்தவர் பளுதூக்கும் வீராங்கனை சந்தோஷ். இவர் பளுதூக்கும் போட்டிகளில் தேசிய அளைவில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201705112121356899_Powerlifting2._L_styvpf.gif)
வீராங்கனை சந்தோஷின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அவரது தந்தை சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகின்றார்.
இதனிடையே, பயிற்சியின் போது தீடிரென அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தொடர்ச்சியாக பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, வீராங்கனை சந்தோஷ் தற்போது தந்தையின் டீ கடையில் அவருக்கு உதவியாக வேலைகள் செய்து வருகின்றார்.
தனது நிலை குறித்து சந்தோஷ் கூறுகையில், “பயிற்சியின் போது எனக்கு காயம் ஏற்பட்டது. அதனால் என்னால் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. நான் நிறைய சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளேன். அரசு எனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201705112121356899_Powerlifting._L_styvpf.gif)
நம்முடைய நாட்டில் விளையாட்டு துறையில் ஏழ்மை நிலையில் உள்ள வீரர்கள் தொடர்ந்து விளையாட்டில் நீடிக்க முடியாத அவல நிலை உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)