என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
    பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. உடல்நிலை காரணமாக அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. 

    இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நரசிம்மன் ஆளுநராக இருந்து வந்தார். அவருக்கு பதிலாக ஆந்திராவிற்கு சுஷ்மா சுவராஜ் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
    மேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
    மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்தே மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

    உச்சக்கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறையில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்ததுடன் ஆலோசனைக்குழுவை அவசரமாக மேற்கு வங்காளம் அனுப்பி வைத்தது.

    மேற்கு வங்காள கவர்னர் வன்முறை சம்பவம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதனால் மம்தா ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தப்படுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறை படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் எப்போதுமே ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரானவர்கள். இதுதான் எங்களது கொள்கை. மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகத்தான் இருக்கிறது. அதற்காக, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது’’ என்றார்.
    எம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.

    தர்மபுரி:

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம் பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு கூறுகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்து பொதுக்குழுவை கூட்டி இரட்டை தலைமை என்று முடிவு செய்யப்பட்டு இன்று ஆட்சியும், கட்சியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


    அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரது கருத்தை வரவேற்று குன்னம் ராமசந்திரன் எம்.எல்.ஏ. ஊடகங்களிடம் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். எம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் இருவரும் வெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத் தக்கது.

    பாராளு மன்ற தேர்தலில் தோற்று, அ.தி.மு.க. வுக்கு தற்போது பல்வேறு சோதனைகள் வந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

    சட்டமன்ற உறுப்பினர்களின் இதுபோன்ற கருத்துக்களால் எதிரிகளுக்கு, துரோகிகளுக்கு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைந்துவிடும்.

    இவர்களுடைய கருத்துக்களால் துரோகிகள் இன்று சசிகலா தான் அ.தி.மு.க.வுக்கு தலைவராக வரவேண்டும் என்று பேசி வருகிறார்கள். எனவே இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

    பா.ஜனதா கூட்டணி மந்திரி சபையில் அ.தி.மு.க. சேருவது குறித்து அ.தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரனால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.

    தர்மபுரி:

    முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளருமான பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகளை பதவி ஆசை காட்டி அ.தி. மு.க.வில் இணைத்து வருகின்றனர். தலைவர்கள் தான் தங்கள் சுயநலத்திற்காக சென்றுள்ளனர். யார் சென்றாலும் அ.ம.மு.க. வீறு நடைபோட்டு செல்லும்.

    ராஜன் செல்லப்பா அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அப்போதே நாங்கள் வலியுறுத்தினோம். ஒற்றை தலைமையை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் முன்பு கூறிய கருத்தை மீண்டும் நான் நினைவு படுத்துகிறேன். அ.தி.மு.க.விற்கு பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் சசிகலா தான் வரவேண்டும் என்று அவர்கள் முன்பு குரல் கொடுத்ததை தற்போது அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்த பிறகு தான் அ.தி. மு.க.வில் பிளவு ஏற்பட்டது. அதன்பின்னர் கூவத்தூருக்கு சென்று 122 எம்.எல். ஏ.க்கள் துணையோடு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சந்தர்ப்பத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.


    ராஜன்செல்லப்பாவை விட்டு ஓ.பன்னீர்செல்வம் பேச சொல்கிறார். டெல்லிக்கு செல்லும்போது ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக செல்கிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றபோது ஓ.பன்னீர்செல்வம் மகன் மட்டும் எப்படி வெற்றி பெற்றார்? ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.விற்கு உள்ள 3 சீட்டுகளில் ஒரு பதவி அன்புமணி ராமதாசுக்கு வழங்கி விட்டால் மீதம் உள்ள 2 பதவிகளை பா.ஜனதா கேட்கலாம். அ.தி.மு.க.வை வழிநடத்த டி.டி.வி. தினகரனால் மட்டுமே முடியும்.

    நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். தோல்வியை கண்டு துவளாமல் சுறு சுறுப்புடன் கட்சி பணி ஆற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்களானாலும், தொண்டர்களானாலும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீண்டும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற  ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அ.தி. மு.க. வீறுகொண்டு எழுந்து மகத்தான வெற்றியை பெறுவோம். அ.தி.மு.க.வை வீழ்த்த பலர் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக அ.தி.மு.க.  உள்ளது.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் நாம் வாக்கு சேகரிக்க சென்ற இடத்திலும் மக்களிடம் எதிர்ப்பு இல்லை.

    குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அடிப்படை வசதிகளை தமிழகமெங்கும் நன்கு மேம்படுத்தி கொடுத்துள்ளனர். நேரடியாக மக்களிடம் தொடர்பு கொண்டவர்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். அதனால்  பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். காலம் தாழ்த்தாதீர்கள். உங்களுக்குள் யார் பதவிக்கு தகுதியான நபர் என்பதை தேர்வு செய்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். 

    திருப்பரங்குன்றத்தில் சிறு,சிறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை தவற விட்டு விட்டோம். இனிமேல் மீண்டும் அதுபோன்ற ஒரு தவறை நாம் செய்து விடக்கூடாது. அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் கட்டுப்பாடுகளை நாம் காப்பாற்ற வேண்டும். தோல்வியால் தொண்டர்கள் சோர்ந்த விடக் கூடாது. 

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் என்று ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
    ரேணிகுண்டா:

    இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி , முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  

    அதனைதொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- 

    திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி.  
    மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் உதவ வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எல்லா உதவியும் செய்து தரப்படும். பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

    மதுரை:

    த.மா.கா. மாநில செயலாளர் சிலுவை இல்ல திருமண விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தீட்டிய திட்டங்களை முதல்- அமைச்ச எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த அரசுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் செயலாற்றுவோம்.


    வருகிற உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.- அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் வகையில் வியூகம் வகுத்து செயல்படுவோம்.

    வருகிற 16-ந்தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமையில் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. அவர்களது தலைமையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றுள்ளனர். இவைகள் அனைத்துமே மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். நீட்தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, மாதந்தோறும் ரூ.6000 போன்ற வாக்குறுதிகளை யாராலும் நிறைவேற்ற முடியாது.

    நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்ததால் இதனை சொல்லவில்லை. ஆனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி கூறி பொய்யான வெற்றியை பெற்றுள்ளனர்.

    எங்களுக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு படிப்பினையாகும். இதன்மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் புதிய உத்வேகத்துடன் பணியாற்றி மக்கள் மனதில் இடம்பெறுவோம்.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை வேண்டும் என ராஜன்செல்லப்பா கூறிவருகிறார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. அவரது தலைமையின் கீழ் அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.


    இடையில் சிறுசிறு பிரச்சினைகள் எழும்போது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சச்சரவைப்போல பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவரது கருத்தை வெளியில் சொல்லாமல் அதற்குரிய இடமான செயற்குழுவில்தான் கூறியிருக்கவேண்டும்.

    அ.தி.மு.கவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் உழைப்பால் தழைத்தோங்கும் ஒப்பற்ற பேரியக்கம். எம்.ஜி.ஆரால் தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு உருவாக்கிய இயக்கமே அதிமுக. எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு தமிழ் நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது அவருக்கு, ஸ்ரீராமனுக்கு உதவிய அணிலாக துணை நின்ற பலர் இன்றும் அந்த நாள் நினைவுகளை பசுமையாக இதயத்தில் கொண்டிருக்கிறோம். எத்தனை, எத்தனை அடக்குமுறைகளையும், அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும் துச்சமென எதிர்கொண்டு சாதாரண ஏழை, எளிய தொண்டனின் இரத்தத்தாலும், வியர்வையாலும், உயிர் தியாகத்தாலும் இந்த இயக்கம் இத்தனை பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கையில் வலியும், வேதனையும் அதே நேரத்தில் பெருமிதமும், ஆனந்தமும் உண்மையான கழகத் தொண்டன் ஒவ்வொருவர் நெஞ்சிலும் அலை, அலையாய் எழுகின்றன.

    எம்ஜிஆரின்  மறைவுக்குப் பிறகு பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, தனது வாழ்வையே கழகத்திற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணித்து அதிமுக ஆயிரம் காலத்துப் பயிர் என்பதை உறுதிசெய்த ஜெயலலிதாவின் உழைப்பை நாம் எல்லாம் கண்கூடாகக் கண்டோம். தனது வாழ்வின் இறுதி மூச்சு உள்ளவரை கழகப் பணிகளில் கண்ணும் கருத்துமாக, ஜெயலலிதா பாடுபட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. 

    தனது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புகூட அவர் தேர்தல் பணிகளில் முழு மூச்சாய் ஈடுபட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியை நமக்கு உரித்தாக்கினார் என்பதை எண்ணிப்பார்க்கையில் இதயம் விம்முகிறது.
    ஜெயலலிதா அகால மரணம் கழக உடன்பிறப்புகளை அரசியல் அனாதைகளாக்கிவிடும் என்று பலரும் பகற்கனவு கண்டுகொண்டிருந்த நேரத்தில் நாம் கழகத்தைக் காப்பாற்றினோம். எம்ஜிஆர் கண்ட
    வெற்றிச் சின்னமாம்.

    இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்தோம். “இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு?” என்று எகத்தாளம் பேசியவர்களையும்,
    “தீபாவளிக்குள் கலைந்துவிடும்”, “பொங்கலுக்குள் போகிப் புகையாகிவிடும்” என்று ஆரூடம் கூறியவர்களையும் வாயடைக்கச் செய்யும் வகையில் ஜெயலலிதாஅமைத்துத் தந்த அரசைக் காப்பாற்றினோம். நாடு போற்றும் நம் நல்லாட்சி இதோ நான்காம் ஆண்டில் வெற்றிநடை போடுகிறது. நாம் எவ்வளவு எளிய பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தபோதிலும் நமது கொள்கைப் பற்றாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களிடம் நாம் கற்ற பாடத்தாலும்தான் இவை எல்லாம் சாத்தியமாயிற்று.

    அதிமுக இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் ஒப்பற்ற இயக்கம் என்றும்; தலைமைக்கும், கொள்கைக்கும் என்றென்றும் விசுவாசமாய் செயல்படும் தொண்டர்களைக் கொண்ட நிகரில்லாத இயக்கமென்றும் எல்லோரும் நம்மைப் பார்த்து வியந்தார்கள். நம் எதிரிகளும் கூட நம்மைப் போல் இருக்க ஆசைப்பட்டார்கள்.

    கடந்த சில நாட்களாக கழக உடன்பிறப்புக்கள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுவரும் கருத்துக்கள் அவ்வளவு வரவேற்கத் தக்கவையாக இல்லை. கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது என்பதையும், அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்படவேண்டும்!

    ஊர் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம் என்பதை எல்லோரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். நம்மை அழிக்கை நினைப்பவர்களுக்கும், ஒரு நாளேனும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று பித்தம்
    தலைக்கேறியவர்களாய் பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாதல்லவா?

    கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஓர் இயக்கத்தை உலகம் எடைபோடும். கழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை யார் கூற விரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும் செயற்குழு-பொதுக்குழு-ஆலோசனைக் கூட்டம் என்று
    பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்.

    நம்முடைய பொதுவாழ்வு என்பது புனிதமானது. அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல. நம் இனத்தின் விடுதலையை நாம் தேடுகிறோம். அந்தத் தேடலில் நமக்குத் துணை செய்யவே பதவியும், அரசும் என்பதை அறிந்திருக்கிறோம். நாம் ஒரு தாய் மக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். கழகத்தின் கடைசித்
    தொண்டனின் உணர்வுகளையும், அவனது எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில்தான் நம் பணிகள்
    அமைந்திருக்கின்றன.

    கழக உடன்பிறப்புக்கள் இனி கழக நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கழகத்தின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களைக் கூறாமல் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்பட்டதைப் போன்றே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒத்து வராது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி தண்ணீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரச்சனையை எதிர்க் கட்சியினர் பார்த்துக்கொள்வார்கள் என்று பேசியது பொறுப்பற்ற பேச்சு. அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை, இரட்டைத் தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய போவதை இது காட்டுகிறது.


    கட்சி, இயக்கம், அமைப்பு என்றாலே இதுவரை ஒரு தலைமை மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது. இரட்டை தலைமை என்பது ஒத்து வராது. தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகாவில் மேகதாது அணை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுவோம் என்று கூறவில்லை. தவறான தகவலை தொடர்ந்து தமிழக முதல்வர் பேசி வருகிறார். இந்த பிரச்சினையில் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ராகுல்காந்தி மீது பழியை போடுகிறார்.

    தமிழகத்தில் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி நடைபெறும் என்று விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் வேதனை அடையச் செய்துள்ளது. ஆணைய உத்தரவுப்படி 9 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை, மத்திய அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை.

    அதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய கட்சி தலைமை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆட்சியை கலைத்தாலும் புதுச்சேரியில் செயல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    ஆனால் தமிழக முதல்வர் இந்த வி‌ஷயத்தில் மெளனம் காப்பது ஏன்? மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, 8 வழிச்சாலை திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான செயல்பாட்டையே அரசு எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் அரசு ஆய்வு செய்து முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரை தேர்வு செய்து கட்சியை ஒப்படைக்க வேண்டும் என அக்கட்யின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி, பெங்களூருவில் செய்தியாளரிடம் கூறியதாவது:-

    பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கின்மை அதிகரித்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை கட்சியின் தலைவராக அவர் இருக்கிறார். எனவே கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும்.

    ராகுல் காந்தி உறுதியான தலைவர். தலைவர் பதவியில் இருந்து அவர் விலகும் பட்சத்தில், கட்சியை மறுசீரமைப்பு செய்து விட்டு செல்ல வேண்டும். நேர்மையான, சரியான நபரை தேர்வு செய்து கட்சியை ஒப்படைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதற்கு வழிவகுத்துவிடக் கூடாது. ராகுல் அதை அனுமதிக்கக் கூடாது.

    இவ்வாறு மொய்லி கூறினார். 

    வீரப்ப மொய்லியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
    மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஒடுக்கியது போன்று ஒடுக்கப்பார்க்கிறார் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
    பாட்னா:

    கிரிராஜ் சிங் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஆவார். இவர் பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கன்னையா குமாரை விட 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

    மத்திய மந்திரியாக பொறுப்பேற்றப்பின் பீகார் மாநில பாஜக கட்சி தலைமையகத்திற்கு வந்த கிரிராஜ் சிங் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக-வின் வெற்றி மம்தா பானர்ஜிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் போன்று ஜனநாயகத்திற்கு விரோதமாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் மம்தா பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது நரேந்திரமோடியை பிரதமர் என கூற மறுத்ததோடு மட்டுமல்லாமல் காலாவதியான பிரதமர் என கூறியுள்ளார். 

    மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்குபெறாமல் அந்த அமைப்பை பலன் அற்ற அமைப்பு என குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தகைய மனப்பான்மையுடன் மேற்கு வங்காள முதல்வராக செயல்படும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெகு விரைவில் முடிவுக்கு வரும்.

    இவ்வாறு மத்திய மந்திரி கிரிராஜ் சிங்  தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×