search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் நரசிம்மன்"

    தெலுங்கானா மாநிலத்துக்கென புதிதாக உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார். #ThottathilBhaskaranNairRadhakrishnan
    ஐதராபாத்:

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.

    முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.

    மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம்  பரிந்துரைத்தது.

    மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை கடந்த 26-ம் தேதியன்று வெளியிட்டார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்கும் இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர் நீதிமன்றமாகும். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 நீதிபதிகள் இங்கு நியமிக்கப்படுவார்கள்.

    இதைதொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் இன்று முதல் தெலுங்கானா உயர் நீதிமன்றம் என்று மட்டுமே அழைக்கப்படும்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கென புதிதாக உருவாக்கப்பட்ட ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக  தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.

    ஐதராபாத் நகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற எளிய விழாவில் தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணனுக்கு அம்மாநில கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதற்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர், தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. #FirstChiefJustice #TelanganaHighCourt #ChiefJusticeswornin #ThottathilBhaskaranNairRadhakrishnan 
    ×