search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்"

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் மகன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது வீடு திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ளது. இவரது மகன் வெங்கடேசன் திருமணமாகி மெங்கில்ஸ் ரோடு மென்டோன்சா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸ் விசாரணையில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளரின் பெயரை மாற்றி கூறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையை ஏற்படுத்தினார். #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மணிக்கூண்டில் இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்து அமைச்சரை திரும்பி பார்த்தார். உடனே சுதாரித்துக் கொண்டு ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

    அதன் பின் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் பட்டியலை சொல்லும் போது மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார். இதனால் அருகில் இருந்த தொண்டர்கள் அவரை ஏறிட்டு பார்த்தனர். பின்னர் சரத்பாபு என்றார். இதனால் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ற மேடையிலேயே மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பேசினார். அதன் பிறகு நடந்த பல பிரசார கூட்டங்களிலும் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளர் பெயரை மாற்றி கூறியதோடு மட்டுமின்றி நடிகர்கள் பெயரையும் சேர்த்து கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் தொகுதி பெயரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். பெரியகுளத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வேட்பாளர் பெயர் மற்றும் அவர் போட்டியிடும் தொகுதியின் பெயரை மாற்றி மாற்றி கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார்

    முதலில் ரவீந்திர குமார் என்றும் பின்னர் ரவீந்திரநாத்தாகூர் என்றும் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி என்பதற்கு பதிலாக பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி என்று மாற்றி கூறினார்.

    மேலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெயரை முதலில் மயில்வேல் என்றும் பின்னர் வேல் மயில் என்றும் கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்போது மேடையில் ஏறி பேசினாலும் சர்ச்சையான கருத்துகளை கூறுவது வழக்கம். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றும் சர்ச்சையான கருத்துகளை கூறி வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் சீனிவாசன் பேசிய கருத்துகளால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. #DindigulSreenivasan #RahulGandhi
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அணியாகவும், அவரது பேரன் ராகுல்காந்தி ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். இரு துருவங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஓட்டு வேட்டை நடக்கிறது.

    தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி அ.தி.மு.க. என்று தெரிந்ததால்தான் பா.ஜனதா எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. நாட்டில் இன்றைய நிலையை கருதி பா.ம.க. எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்றது போல இந்தமுறையும் எங்களால் தனித்து நின்று வெற்றி பெற முடியும். எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து தனது பேச்சை பேசிக் கொண்டே இருந்தார்.

    இதற்கு முன்பு நடந்த பல கூட்டங்களிலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையான கருத்துகளை கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், ஜெயலலிதாவுக்கு சசிகலா வி‌ஷம் வைத்து கொன்று விட்டார் என்றும், அப்பல்லோலில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் பொய் சொன்னோம் என்றும், மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை தமிழக கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரசிம்மாராவிடம் மனுகொடுத்துள்ளார் என்றும் தொடர்ந்து பலவிதமான சர்ச்சை பேச்சுகளை பேசி வந்தார். பாராளுமன்ற தேர்தலுக்காக தினசரி பிரசாரத்துக்கு சென்று வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று என்ன பேச போகிறார் என கட்சியினரும் செய்தியாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #DindigulSreenivasan #RahulGandhi

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உள்ளார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றித் தரும் போது அதனை கூட்டணியில் சேர்த்ததில் என்ன தவறு? ஊழல் செய்ததற்காக ஆட்சியை பறி கொடுத்த ஒரே கட்சி இந்தியாவில் தி.மு.க. மட்டும்தான். தற்போது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் நடக்காததற்கும் தி.மு.க.தான் காரணம்.

    ஆனால் இதனை மறைத்து ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி வருகிறார். பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. அவரது மகன் எப்படி இருப்பார்? மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.



    ஊழல் இல்லாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம்.

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருகிறது. அதனை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்தியது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேகதாது என்பதற்கு பதிலாக மீத்தேன் என அமைச்சர் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    மேலும் அவர் பேசுகையில் மத்திய மந்திரி விஜய் கோயல் எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வுடன் பேசி வருகிறார் என்றார். பியூஸ் கோயல் என்பதற்கு பதிலாக விஜய் கோயல் என கூறியதால் தொண்டர்களிடம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார் என உங்களிடம் பொய்சொல்லிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

    மற்றொரு கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர் என்றார்.

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார்.

    வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை அடிக்கடி பிரதமர் நரசிம்மராவை சந்தித்து வருகிறார் என்றார். அந்த கூட்டத்திலும் பிரதமர் பெயரை மாற்றி கூறினார். இதுபோல பல்வேறு கூட்டங்களில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் பேசிய சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #DindigulSreenivasan #chennaiairport
    ஆலந்தூர்:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

    இவர் கடந்த 17-ந்தேதி காலை 8.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமாகி இருந்தது.

    வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருடு போய் இருப்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் ஏர் இந்தியா அலுவலகம் மற்றும் விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

    மேலும் சென்னை விமானநிலைய போலீஸ் மற்றும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் அன்றைய தேதியில் பதிவாகியுள்ள கேமரா காட்சிகள் மற்றும் அந்த விமானத்திற்குள் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    விமான நிலைய தொழிலாளர்களிடமும் விசாரணை நடந்தது. #DindigulSreenivasan #chennaiairport
    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan #admk #pmmodi

    மேலூர்:

    மேலூர் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தில்நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பேசினர்.

    மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோரல் வழியில் வந்த அ.தி.மு.க. இயக்கத்தை ஓ,பி.எஸ்., இ.பி.எஸ். வழி நடத்துகின்றனர். இயக்கத்தை அசைத்து விடலாம், குந்தகம் விளைவிக்கலாம் என சிலர் நினைத்து வருகின்றனர்.

    தற்போது வலுவான கூட்டணி அ.தி.மு.க. அமைத்து வருகிறது. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் என்பது போல கேட்காமல் கொடுத்து வரும் அரசு. அ.தி.மு.க. அரசு. ஸ்டாலின் என்றைக்கும் தி.மு.க.விற்கு தளபதியாக மட்டுமே தான் இருப்பார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைபெற்று வருகிறது.

    வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-2 முடித்த அனைவருக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஜெயலலிதா இறந்து 2 அரை ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க இன்று கூட்டணி அமைத்திருக்கின்றனர். பா.ம.கவும் கூட்டணிக்கு வந்துள்ளனர்.

    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல.

    வடமாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றிபெற்றவுடனே, கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

    ஆனால் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் அரசியல் ஆண்மை இருந்தால் அங்கே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை.

    இரட்டை வேடம் ஸ்டாலின் போடுகின்றார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலை போய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார்.

    தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா? அ.தி.மு.க. என்றால் பணமா? மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதா இருந்த போது பா.ம.க 1998, 2009-ல் கூட்டணி வைத்திருந்த போது தோல்வி ஏற்பட்டதாக தி.மு.க. கூறுகின்றனர்.

    ஆனால் வைகோ, பா.ம.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதா தான். சாக்கடை வசதி, மின்விளக்கு எரியாதது போன்றவை உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம் என ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கே இதற்கே காரணம். ஆனால் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறுஅவர் பேசினார்.

    கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், விரகனூர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றிசெழியன், நகர் செயலாளர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி,பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஜபார், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் அம்பலம், பேருர் செயலாளர் மணிகண்டன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், முன்னால் கவுன்சிலர் சரவணக்குமார், அமைப்பு சாரா செயலாளர் அன்புச்செல்வம், பாசறை சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிக மரங்கள் வளர்ப்பது குறித்தும், மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வன விலங்குகளை காட்டுக்குள் அனுப்புவது பற்றியும் உறுப்பினர்கள் கார்த்திகேயன், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

    தற்போது சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருக்கிறது. தினமும் தொலைக்காட்சிகளில் அதுபற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த யானையை என்ன செய்யப் போகிறீர்கள் என்று உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

    ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வருகிறது. கோர்ட்டு உத்தரவுப்படி சின்னதம்பி யானை காட்டுக்குள் அனுப்புவதா? அல்லது மக்களுக்கு அது தொந்தரவு செய்யாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    காட்டுப் பன்றிகள் தொந்தரவு பற்றியும் குறிப்பிட்டார்கள் அவற்றை சுட்டு பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    மனிதர்களிடம் இருந்து மிருகங்களை காப்பதும், மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பதும் அரசின் கடமை. அதை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது.

    வனப்பகுதியிலும் வாய்ப்பு உள்ள இடங்களிலும் மரங்களை வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் வனங்களின் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ.54 கோடி செலவில் புயலால் பாதிக்காத பனை, சவுக்கு, தேக்கு போன்ற மரங்களை நட அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
    மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக கறவை பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கறவை பசுக்கள் மட்டுமின்றி இலவச ஆடுகளும் வழங்கப்படுகின்றன.

    தமிழக பட்ஜெட்டில் கல்விக்கென ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    செம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாரயாணசாமிக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கைகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 58 வயது வரை அரசு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.



    மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆட்சி செய்தார்.

    இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    அமைச்சர் சீனிவாசன் பேசும் கூட்டங்களில் எல்லாம் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திலும் சீனிவாசன் பேசிய பேச்சால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தினகரனுக்கு பட்ஜெட் என்றாலே என்ன என்று தெரியாது. அவர் தமிழக பட்ஜெட்டை குறைசொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமத்தில் இதுவரை யாரும் பஸ் மறியலில் ஈடுபடவில்லை. தமிழக பட்ஜெட்டை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    டிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். #DindigulSreenivasan #TTVDhinakaran
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். டி.டி.வி.தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்தால் அது குறித்து பார்க்கலாம். சின்னதம்பி யானையை கும்கி ஆக மாற்ற வேண்டும் என ஒருவரும், மாற்ற வேண்டாம் என ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.



    கஜா புயலால் மலைப்பகுதியில் விழுந்துள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள பரப்பாறு அணை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட வன அதிகாரியும் பேசி முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DindigulSreenivasan #TTVDhinakaran

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இதில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும். மக்களுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. மட்டுமே எதிர்கட்சி. மற்ற எந்த கட்சியையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. அரசியல் களத்தில் அவர்களை எதிர்த்தே எங்கள் பிரசாரம் இருக்கும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிவாரணம் அளிக்கவில்லை. அதற்காகத்தான் நாங்கள் மீண்டும் கடிதம் எழுதி வருகிறோம்.

    உரிய நிவாரணத்தை பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அ.தி.மு.க. அரசு உறுதியாக செய்து தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    என் விவசாய நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்கிறார் என்று தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். #thapandian #ministerSrinivasan

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தா.பாண்டியன் ஈரோடு மூலக்கரையில் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

    அப்போது தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஒடுக்க நினைத்து அவர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது என்று நடவடிக்கையை எடுப்பதன் மூலம் விவசாயிகளை ஒடுக்க முடியாது. அடக்க முடியாது. ஆகவே உடனடியாக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    நானும் ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்து வருகிறார். அவரது மருமகனுக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் அவர் பட்டா போட்டு கொடுக்கட்டும். அத்து மீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் சும்மா இருக்க மாட்டோம். காவல் துறையையும் சந்திப்போம். அமைச்சரையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

    மேலும் தனியார் நிலத்தை பங்கு போடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும்.

    ஜெயலலிதாவை “மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்து” கொன்று விட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார். இதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும். ஸ்லோபாய்சன் கொடுத்தது யார்? கொலையாளி யார்? யார்-யார் உடந்தை? என்பதை அவர் சொல்ல வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்த வேண்டும். அப்படி அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு தா.பாண்டியன் கூறினார். #thapandian #ministerSrinivasan

    ×