search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் மகன் வீட்டில் நகை கொள்ளை
    X

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் மகன் வீட்டில் நகை கொள்ளை

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் மகன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது வீடு திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ளது. இவரது மகன் வெங்கடேசன் திருமணமாகி மெங்கில்ஸ் ரோடு மென்டோன்சா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸ் விசாரணையில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    Next Story
    ×