search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர்
    X

    பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர்

    பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் தொகுதி பெயரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். பெரியகுளத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வேட்பாளர் பெயர் மற்றும் அவர் போட்டியிடும் தொகுதியின் பெயரை மாற்றி மாற்றி கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார்

    முதலில் ரவீந்திர குமார் என்றும் பின்னர் ரவீந்திரநாத்தாகூர் என்றும் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி என்பதற்கு பதிலாக பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி என்று மாற்றி கூறினார்.

    மேலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெயரை முதலில் மயில்வேல் என்றும் பின்னர் வேல் மயில் என்றும் கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்போது மேடையில் ஏறி பேசினாலும் சர்ச்சையான கருத்துகளை கூறுவது வழக்கம். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றும் சர்ச்சையான கருத்துகளை கூறி வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் சீனிவாசன் பேசிய கருத்துகளால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    Next Story
    ×