என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காயல்பட்டினத்தில் 3 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்- சிறையிலிருந்து வெளிவந்த கணவர் அதிர்ச்சி
- சதாம் உசேன் மீது கஞ்சா வழக்குகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சதாம் உசேன் தண்டனை காலம் முடிந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மனைவியும் குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது31). இவரது மனைவி பரக்கத் நிஷா (29). இவர்களுக்கு ஜாபர் சாதிக், ஷேக் அலாவுதீன் என்ற மகன்களும், வாபியா என்ற மகளும் உள்ளனர்.
மாயம்
சதாம் உசேன் மீது கஞ்சா வழக்குகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில் கடந்த 9-ந்தேதி விடுதலை ஆனார். அன்று மாலை சதாம் உசேன் காயல்பட்டினத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.
தனது மனைவியும் குழந்தைகளும் எங்கே சென்று இருப்பார்களோ என்று நினைத்த சதாம் உசேன் இது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அதற்கு பலரும், கடந்த 3 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் எங்கே சென்றனர் என்பது எங்களுக்கு தெரியவில்லை, என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் பல இடங்களில் தேடியும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் இது பற்றி அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
காயல்பட்டினம் பாஸ் நகரைச் சேர்ந்தவர் ரூபன் (வயது34), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துச்செல்வி (26). இவர்களுக்கு விக்டர் (9), அந்தோணி (7) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 17-ந்தேதி ரூபன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். மாலையில் திரும்பி வந்தபோது வீடு பூட்டிக் கிடந்தது.
நீண்ட நேரம் ஆகியும் அவரது மனைவியும் குழந்தைகளும் வரவில்லை. இதனால் ரூபன் அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அப்போது முத்துச்செல்வி, தனது குழந்தைகள் இருவரையும் அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு தான் வீரபாண்டியன்பட்டி னத்திற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
இதன் பின் ரூபன் தனது உறவினர்களுடன் பல இடங்களில் தேடியும் முத்து செல்வியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்