search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் ஊருக்குள் புகுந்து 3 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்
    X

    வால்பாறையில் ஊருக்குள் புகுந்து 3 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்

    • நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் வந்தது.
    • வெகுநேரமாக அங்கு சுற்றி திரிந்த யானை கூட்டம் அந்த பகுதியில் இருந்த 3 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    வால்பாறை அடுத்துள்ளது முத்துமுடி எஸ்டேட். இந்த பகுதி அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இங்கு காட்டு யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் சுற்றி திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் வந்தது.

    வெகுநேரமாக அங்கு சுற்றி திரிந்த யானை கூட்டம் அந்த பகுதியில் இருந்த 3 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.

    வீட்டில் இருந்த ஜன்னல், கதவு உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியது. இந்த வீடுகளில் தற்போது யாரும் வசிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் எழுந்து பார்த்தபோது 3 வீடுகளும் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியாகினர். உடனடியாக வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×