search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 60 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
    X

    வைகை அணை (கோப்பு படம்)

    பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 60 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் பருவமழையால் முழு கொள்ளளவை எட்டியது.
    • மேலும் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் பருவமழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    மேலும் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 60.20 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1852 கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.90 அடியாக உள்ளது. 861 கன அடி நீர் வருகிற நிலையில் 2016 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக உள்ளது. 21 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.17 அடியாக உள்ளது. ஒரு கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4, தேக்கடி 2, கூடலூர் 1.7, உத்தமபாைளயம் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×