search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் கூலி தொழிலாளி பலி
    X

    விபத்தில் கூலி தொழிலாளி பலி

    வாழப்பாடி அருகே சாலையை கடக்க முயன்ற கூலி தொழிலாளி விபத்தில் பலியானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (29). கூலித் தொழிலாளி இவர் நள்ளிரவு இரவு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சிவகுமார் மகன் அஜய் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×